The Life and Letters of Lord Macaulay
'ஒரு இந்தியன் என்னதான் மதம் மாறினாலும் ஓரளவு மட்டுமே நல்ல கிறிஸ்தவனாக இருக்க முடியும். '
The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1 | Page 335
'கீழ் ஜாதி ஹிந்துக்கள் நாசுக்கற்றவர்கள். பொதுவாக, அவர்தம் மனைவி வேறு
ஆண்களோடு தகாத உறவு கொள்ளும் பட்சத்தில், அவள் கணவன் அதற்கு நஷ்ட ஈடாக பணம்
பெற்றுகொண்டு விஷயத்தை மறந்துவிடுவான். '
The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1 | Page 335
'சில காலம் முன்பு பஞ்சாப் போலிருந்த ருஷ்யா இன்று நாகரிகத்தின் வரம்பிற்குள் வந்துவிட்டது. இன்று ருஷ்யர்கள் உயர் பதவி பூண்டு இங்கிலாந்து அரசிற்கு சேவை செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அது எங்ஙனம் சாத்தியமாகியது ? நாம் அவர்களுக்கு மேற்கு ஐரோப்பாவின் நாகரிகத்தையும், மொழியையும் பயிற்றுவித்ததால்தானே ? மேற்கு ஐரோப்பிய மொழியும், சிந்தனையும் ஹிந்துக்களையும் நாகரிகத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்துவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. உண்மை இவ்வாறிருக்க, ஹிந்துக்களை புத்திசாலிகள் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது. '
The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1 | Page 355'இந்தியர்களுக்கு என்ன பயிற்றுவிக்க வேண்டுமென்று முடிவு செய்யும் அதிகாரம் பிரிட்டிஷ்காரர்களிடமிருக்கிறது. ஆங்கில மொழியோடு ஒப்பிடும் தகுதி எந்த இந்திய மொழிக்குமில்லை. இங்கிலாந்தில் குதிரைக்கு லாடமடிப்பவன் கூட, இந்திய மருத்துவர்களைவிட அதிகம் அறிந்திருப்பான். இந்திய அறிவியல் நூல்களைப் படிப்பின், இங்கிலாந்தின் பள்ளிக்கூட சிறுமியர்களும் ஏளனத்துடன் சிரிப்பார்கள். '
The Life and Letters of Lord Macaulay, edited by G. Otto Trevelyan, Vol. 1 | Page 354

0 comments:
Post a Comment